சென்னை, மதுரையில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளிஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஐந்தாசிரியர் பள்ளிகளை இரண்டாசிரியர் பள்ளிகளாக மாற்றியதை திரும்பப் பெற வேண்டும், சொந்தமாவட்டத்திற்குள்ளேயே ஆசிரியர்களுக்கு இடமாறுதல் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதேபோல, அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பிலும் சென்னை மற்றும் மதுரையில் உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது.
மேலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காதது,மாணவர்களுக்கு நஷ்ட ஈடு தராதது, உரிய மருத்துவ வசதி கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்து சென்னைவியாசர்பாடியிலும், மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலும் ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்இருந்தனர்.
-->












Click it and Unblock the Notifications