சென்னையில் கழுத்தை நெரித்து பெண் கொலை - நகைகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அமைந்த கரை பகுதியில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்று நகைகளைதிருடர்கள் திருடிச் சென்று விட்டனர்.
அமைந்தகரை பகுதியில் உள்ள வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராதா பாய். இவர் ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்தார். வீட்டில் அவர் மட்டுமே இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் உரிமையாளரான பக்தவச்சலம் தனது குடும்பத்தோடு பக்கத்து தெருவில்நடந்த கோவில் திருவிழாவைக் காணச் சென்று விட்டார்.
அப்போது சிலர் ராதா பாய் இருந்த வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவரது கழுத்தை சேலையால் நெரித்துஅவரைக் கொன்றனர்.
இதையடுத்து ராதா பாய் அணிந்திருந்த செயின், தோடு மற்றும் வளையல் ஆகியவற்றைத் திருடிக் கொண்டுஅவர்கள் தப்பி விட்டனர்.
இந்தக் கொலை-கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி திருடர்களைத் தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications