வீரப்பன் வேட்டை திடீர் நிறுத்தம்: அதிரடிப்படைக்கு கிருஷ்ணா உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மாதேஸ்வரன் மலை (கர்நாடகம்):

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பனைத் தேடும் பணியை உடனடியாகநிறுத்துமாறு கர்நாடக அதிரடிப்படைக்கு அம்மாநில முதல்வர் கிருஷ்ணா திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொள்ளேகால் அருகே உள்ள மாதேஸ்வரன் மலைப்பகுதியில் இருக்கும் தன்னுடைய குல தெய்வமானமாதேஸ்வரன் கோவிலுக்கு கிருஷ்ணா நேற்று சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நாகப்பாவின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதால் வீரப்பனுக்கு எதிரான தேடுதல் வேட்டையை உடனடியாகநிறுத்துமாறு நாகப்பாவின் குடும்பத்தினரும், எதிர்க் கட்சிகளும், சில மடாதிபதிகளும் வற்புறுத்தி வருகின்றனர்.

எனவே தற்போதைக்கு வீரப்பன் வேட்டையை நிறுத்தி வைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

நாகப்பாவை மீட்பது தான் இப்போதைக்கு அரசின் முதல் வேலை. அவரை மீட்பதற்காக அரசு மேற்கொள்ளும்நடவடிக்கைகளுக்கு அவருடைய குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும்.

வீரப்பனுடன் பேச்சு நடத்த யாரும் இதுவரை தைரியமாக முன்வரவில்லை. அவ்வாறு வந்தால் அவர்களைஅனுப்ப அரசு தயாராகவே உள்ளது. அவர்கள் உள்ளூர் மக்களாக இருந்தாலும் பரவாயில்லை என்றார் கிருஷ்ணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+