"நாத்திகர்" கருணாநிதி கடவுளை விமர்சிக்க கூடாது: சங்கராச்சாரியார்
காஞ்சிபுரம்:
கடவுள் குறித்து விமர்சிக்க நாத்திகரான கருணாநிதிக்கு எந்தவித தகுதியும் இல்லை என்று காஞ்சி சங்கராச்சாரியார்ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
கருர் அருகே ஒரு கோவிலில் தமிழில் வேத மந்திரம் ஓதப்பட்டு குட முழுக்கு நடந்ததற்கு ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழுக்கு கோவில்களில் இடம் இல்லையென்றால் அந்தக் கோவிலில் கடவுளுக்கும் இடம் இல்லை.தமிழை மறுக்கும் சங்கராச்சாரியாருக்கும் இங்கு இடம் இல்லை என்று கடுமையாகச் சாடியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கருணாநிதிக்கு சங்கராச்சாரியார் பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் அவர் நிருபர்களிடம்பேசுகையில்,
நாத்திகரான கருணாநிதிக்கு கடவுள் குறித்துப் பேச உரிமையில்லை. தகுதியும் இல்லை. பெரியாரின் தொண்டரானகருணாநிதி கடவுள் குறித்துப் பேசத் தேவையில்லை.
நாத்திகத் தமிழ் குறித்து மட்டுமே கருணாநிதி பேசினால் போதும். தெய்வீகத் தமிழ் குறித்து அவர் கவலைப்படவேண்டாம். பேசவும் வேண்டாம்.
இந்தியா ஜனநாயக நாடு. அதில் கருணாநிதி எந்தப் பாதையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து செல்லலாம்.ஆனால் அடுத்தவர் பாதையில் அவர் குறுக்கிடக் கூடாது என்று ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.












Click it and Unblock the Notifications