For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 2 பிரிவுகளாக இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 பிரிவுகளாக விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்த போலீஸார்அனுமதி அளித்துள்ளனர்.

ராம கோபாலன் தலைமையிலான இந்து முன்னணி மற்றும் 8 பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிற்பகல் 1.30மணி முதல் மாலை 6.30 வரை விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள்.

முன்னதாக விநாயகர் முரளி தலைமையிலான இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை 6.30மணியிலிருந்து ஊர்வலமாகச் சென்று விநாயகர் சிலைகளை கரைக்கத் தொடங்கினார்கள்.

ஒரே ஊர்வலமாக அனைத்துப் பிரிவினரும் விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்க முயற்சிசெய்யுமாறு போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அதற்கு ராம கோபாலன் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். விநாயகர் முரளி தலைமையிலானவர்கள்வன்முறையைத் தூண்டி விடுவார்கள். அவர்களை எங்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாது என்று அவர்திட்டவட்டமாக கூறி விட்டதால், முரளி தலைமையிலான பிரிவுக்கு காலையில் ஊர்வலம் நடத்த போலீஸார்அனுமதி வழங்கினர்.

விநாயகர் சிலை ஊர்வலம் நடப்பதையொட்டி ஊர்வலப் பாதை நெடுகிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குகுவிக்கப்பட்டுள்ளனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X