குஜராத்துக்குக் கடத்தப்படவிருந்த 9 தமிழ் சிறுவர்கள் ஆந்திராவில் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 9 சிறுவர்கள் குஜராத் மாநிலத்துக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த போது ஆந்திரமாநில ரயில்வே போலீஸ் படையினரால் மீட்கப்பட்டு சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த சிறுவர்கள் அனைவரும் மதுரை மாவட்டம் சடச்சிப்பட்டியைச் சேர்ந்தவர்கள். குஜராத் மாநிலம் கட்ச் மற்றும்பரூச் ஆகிய பகுதிகளில் முறுக்கு மற்றும் அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களில் கொத்தடிமைகளாக வேலைக்குஅமர்த்துவதற்காக இவர்கள் கடத்தப்பட்டார்கள்.

மொத்தம் 30 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இருப்பினும் சென்னை வருவதற்குள் மற்ற சிறுவர்களை யாரோ சிலர்மீட்டுச் சென்று விட்டதாகத் தெரிகிறது. 9 பேர் மட்டுமே சென்னைக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளனர்.

நேற்று காலை இந்த நாடகம் தொடங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 40க்கும் மேற்பட்டசிறுவர்களை சுமார் பத்து பேர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அவர்களைப் பார்த்தால் சந்தேகமாக இருப்பதாகவும்"சைல்ட்லைன்" என்ற சிறுவர்கள் உதவிப் பிரிவுக்கு போன் வந்தது.

இதையடுத்து "சைல்ட்லைன்" பிரிவு ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா தனது குழுவினருடன் சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு விரைந்தார். குழந்தைகளுடன் பேச முற்பட்டபோது, அவர்களுடன் இருந்த பெரியவர்களும்பெற்றோர்களும் அவர்களைத் தடுத்து விட்டனர்.

இந்த நிலையில் காலை 9.45 மணிக்கு குஜராத் கிளம்பிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுவர்கள் ஏற்றப்பட்டனர்.பின்னர் ரயில் கிளம்பியதைத் தொடர்ந்து ரயில்வே போலீஸார் மூலம் ஆந்திர மாநில ரயில்வே போலீஸாருக்குத்தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கூடூர் ரயில் நிலையத்தில் உள்ளூர் போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் தயார் நிலையில் இருந்தனர்.

ரயில் கூடூர் வந்தபோது, 30 சிறுவர்கள் மட்டுமே ரயிலில் இருந்தனர். அவர்களை மீட்ட ரயில்வே போலீஸார்சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்களை அழைத்து வந்த 10 பேர் மற்றும் சிறுவர்களின் பெற்றோரும்ரயில்வே போலீஸாரின் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் ரயில் சென்னைக்கு வந்தபோது 9 சிறுவர்கள் மட்டுமே ரயிலில் இருந்தனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள்என்பது பற்றித் தெரியவில்லை. அவர்களை அவர்களது பெற்றோர் பாதி வழியிலேயே மீட்டுச் சென்று விட்டதாகக்கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட 9 சிறுவர்களும் சென்னை சிறார் பாதுகாப்பு இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். இந்தசிறுவர்கள் பல முறை குஜராத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனராம்.

சிறிது காலம் வேலை பார்த்து பணம் சம்பாதித்த பின்னர் அவர்களை மீண்டும் ஊருக்குக் கொண்டு வந்துவிட்டுவிடுவார்களாம். பிறகு சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் குஜராத்துக்கு அழைத்துச் சென்று விடுவார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+