For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை, மேலூர் அரசு கல்லூரிகளுக்கு செப்.22 வரை விடுமுறை நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி மற்றும் மேலூர் அரசுக் கல்லூரி ஆகியவற்றுக்கு வரும் 22ம் தேதி வரைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அரசுக் கல்லூரிகள் நாளை (திங்கள்கிழமை) திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி மற்றும் மேலூர் அரசுக் கல்லூரி ஆகியவற்றுக்கு மட்டும்விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் 22ம் தேதி வரை இந்த கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சேது ராமச்சந்திரன்கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர்தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மதுரை மீனாட்சி கல்லூரி மற்றும் மேலூர் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸார் கடும்அடக்குமுறையைக் கையாண்டதாகப் புகார் கூறப்பட்டது.

மேலூர் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் கடுமையான தடியடியும் நடத்தினர். மீனாட்சி கல்லூரிமாணவிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்து கொண்டனர்.

இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இரு கல்லூரி மாணவ-மாணவிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். நாளை (16ம் தேதி) கல்லூரிகள் திறக்கப்பட்டவுடன் தங்களது போராட்டம் தொடரும் என்றும்அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதைக் கருத்தில் கொண்டு கல்லூரிகள் வரும் 22ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X