சென்னையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கேபிள் டிவி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் அதிமுக பிரமுகர் ஒருவர் அரிவாளால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார்.

சென்னை தி. நகர் அருகே உள்ளது கண்ணம்மா பேட்டை. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். சைதைதொகுதி அதிமுக ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த இவர் கேபிள் டிவியும் நடத்தி வந்தார்.

கேபிள் டிவி நடத்துவது தொடர்பாக பச்சையப்பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணுக்கும்இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி வாக்குவாதம் செய்து கொள்வதுவழக்கமாம்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பருடன் பச்சையப்பன் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது.

பின்னர் பச்சையப்பனை சரமாரியாக வெட்டித் தள்ளிய அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில்மிதந்த பச்சையப்பன் உயிருக்குப் போராடினார். அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

தி. நகர் பகுதி துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உடனடியாக போலீஸ் படையுடன் விரைந்து வந்துவிசாரணை மேற்கொண்டார். இந்தக் கொலை தொடர்பாக கோபி, மாறன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

அமுதாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரும் அதிமுகவைச் சேர்ந்தவர் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு முறை பச்சையப்பனைக் கொல்ல முயற்சி நடந்து அதில் அவர் உயிர் தப்பியதும்குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+