வருமான வரி இயக்குநர் வீட்டில் "ரெய்ட்" எதிரொலி: ரஜினியின் ஆடிட்டரும் சிக்கினார்
சென்னை:
வருமான வரித்துறை இயக்குனருக்கு பணம் பெற்றுக் கொடுத்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த்தின் ஆடிட்டர்மாட்டிக் கொண்டார்.
தமிழக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு இயக்குனரான திரிபாதியின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள்சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
"இக்கி ரிசார்ட்ஸ்" என்ற நிறுவனத்துக்கு ஆதரவாக திரிபாதி செயல்பட்டதன் விளைவாக வருமான வரித்துறைக்குரூ.63 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது இந்தச் சோதனைகளின் போது தெரிய வந்தது.
திரிபாதியின் இந்த ஊழல் தொடர்பாக அவருக்குப் பணம் வாங்கிக் கொடுத்த அவருடைய ஆடிட்டர் ஆஷாவிஜயராகவனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை தொடரத் தொடர பல கம்பெனிகளுக்கு ஆதரவாக திரிபாதி செயல்பட்டு, பல கோடி ரூபாய் வரைபெற்றிருப்பதைக் கண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து திரிபாதி மீது சி.பி.ஐ. போலீசார் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே திரிபாதிக்கு பணம் பெற்றுக் கொடுத்த மற்றொரு ஆடிட்டரான சீதாராமனின் வீடு மற்றும்அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சோதனையின் போது திரிபாதிக்கு அவர்பலரிடமிருந்து பணம் பெற்றுக் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.
ரஜினிக்கும் சீதாராமன் தான் ஆடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்ற முயன்ற "சி.பி.ஐ." வக்கீல் கைது:
இதற்கிடையே சிபிஐ வக்கீல் என்று கூறி திரிபாதியை மோசடிசெய்ய முயன்றதாக சென்னையச் சேர்ந்த வக்கீல்ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திரிபாதிக்கு வக்கீல் வெங்கடேஸ்வரன் என்பவர் போன் செய்து, ""நான் சி.பி.ஐயின் மூத்த சட்ட ஆலோசகர்பேசறேன். இது ஒரு வழக்கே இல்லை. இந்த வழக்கிலிருந்து உங்களை விடுவிக்கிறேன். உடனே கன்னிமாராஹோட்டலுக்கு வாங்க"" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் திரிபாதி. இதையடுத்து வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டஹோட்டலுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் பறந்தனர்.
அங்கு வெங்கடேஸ்வரன் வந்தபோது அவரை வளைத்துப் பிடித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications