கோவிலை பூட்டி அர்ச்சகர்கள் ரகளை: மக்கள் கொதிப்பு
திருக்கூடலூர்:
கரூர் அருகே உள்ள திருக்கூடலூர் கோவிலில் தமிழில் மந்திரம் ஓதப்பட்டு குடமுழுக்கு செய்ததால் தீட்டுஏற்பட்டு விட்டதாக கூறி கோவில் அர்ச்சகர்கள் கோவிலைப் பூட்டி ரகளை செய்தனர். இதனால் மக்கள் பெரும்கொதிப்படைந்துள்ளனர்.
கரூர் அருகே உள்ளது திருக்கூடலூர். இங்குள்ள சிவன் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. வழக்கம்போல அல்லாமல் இங்கு தமிழில் மந்திரம் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதற்கு காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் அர்ச்சகர்கள் பேரவை ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்எதிர்ப்புகளையும் மீறி வெற்றிகரமாக குடமுழுக்கு விழா தமிழிலேயே நடந்தது.
இதையடுத்து தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டதை திமுக தலைவர் கருணாநிதிபாராட்டியும், அவரை காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கடுமையாக விமர்சித்தும் அறிக்கைப்போர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்னொரு பரபரப்பான சம்பவமும் திருக்கூடலூரில் நடந்துள்ளது.
தமிழில் மந்திரம் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா நடந்ததால் கோவிலில் தீட்டு ஏற்பட்டு விட்டதாக கூறி கோவில்அர்ச்சகர்கள் கோவிலை இழுத்து மூடி பூட்டி விட்டனர்.
இதனால் அந்தக் கிராம மக்கள் கொதிப்படைந்து கொந்தளித்து எழுந்தனர். அனைவரும் இந்து அறநிலையத்துறைஅதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாக அர்ச்சகர்கள் மற்றும் கிராமப் பிரதிநிதிகளைஅழைத்துப் பேச்சு நடத்தினர்.
அதன்படி கோவில் சம்ப்ரோக்ஷன தினத்தன்று காலையில் தமிழில் மந்திரம் ஓதவும், மாலையில் அர்ச்சகர்களின்விரும்பியவாறு ஆகம விதிமுறைகளின்படி மந்திரம் ஓதவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பூட்டப்பட்ட கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டன.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications