For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2வது நாளாக புலிகள்-இலங்கை தொடர்ந்து பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

சத்தாஹிப் (தாய்லாந்து):

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை 2வது நாளாகஇன்றும் தொடர்ந்து நடக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நேரடிப் பேச்சுவார்த்தை நேற்று தாய்லாந்தில் தொடங்கியது. முதற்கட்டமாகநடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ரகசியமாக நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை சுமார் 3 மணியளவில் முதற்கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 5 மணி நேரம் நேற்றுபுலிகளும் இலங்கை அரசும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளோம் என்றும் இந்தப் பேச்சுவார்த்தைநிச்சயம் வெற்றி பெறும் என்றும் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் கூறினார்.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாகப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. வடக்கு மற்றும் கிழக்குஇலங்கையிலிருந்து வெளியேறிய தமிழர்கள் மீண்டும் அங்கே குடியமர்த்தப்படுவது குறித்து இன்று முக்கியமானபேச்சுக்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.

முதற்கட்டப் பேச்சுவார்த்தையின் இறுதி நாளான நாளை தான் பேச்சுவார்த்தையின் முழு விவரங்களும்எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அறிவிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X