கைதி சாவு: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
கோவை:
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கைதி மர்மமான இறந்தது தொடர்பாக அந்தக் காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 காவலர்கள் வேறு இடத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டனர்.
கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொண்டுவரப்பட்டார். ஆனால், மறுநாள் மர்மமான முறையில் காவல் நிலையத்திலேயே சுரேஷ் இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரது ஊர் மக்கள் போலீஸ் நிலையம் முன் கூடி போராட்டம் நடத்தினர். போலீஸார்அடித்ததால்தான் சுரேஷ் இறந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 காவலர்களை இடமாற்றம் செய்துமாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இருப்பினும் சமாதானம் அடையாத கிராம மக்கள் சுரேஷ் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றுகோரியுள்ளனர். அதுவரை சடலத்தையும் வாங்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இதனால்கருமத்தம்பட்டியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-->












Click it and Unblock the Notifications