அரசு கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்கள் வரவில்லை
சென்னை:
தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரிகள் மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலானமாணவர்கள் வகுப்புகளுக்கு வரவில்லை.
வகுப்புகளைப் புறக்கணித்து அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
பல்கலைக்கழகங்களுடன் கல்லூரிகளை இணைக்கும் முடிவை அரசு மாற்றிக் கொள்ளாதது, மேலூர் அரசுக் கல்லூரிமாணவர்கள் மீது போலீஸார் நடத்திய அநியாய தடியடி, மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரி மாணவிகளைகாட்டுமிராண்டிகளாக போலீசார் தாக்கியது ஆகிய விவகாரங்களுக்கு அரசிடம் இருந்து பதில் கிடைக்கும் வரைபோராட்டத்தைத் தொடரப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த சோப்ளாங்கி மாணவர் சங்கத்தினரை அழைத்துப் பேசிவிட்டு பிரச்சனை தீர்ந்துவிட்டதாகஅறிவித்த முதல்வர் ஜெயலலிதா கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சம்மேளனம்உள்ளிட்ட முன்னணி மாணவர் சங்கங்கள் அனைத்தும் ஸ்டிரைக்கைத் தொடரப போவதாக அறிவித்துள்ளன.
மாணவர்கள் மத்தியில் அதிமுகவுக்கு ஆதரவு எப்போதும் குறைவு தான். இந்த அதிமுக ஆதரவு மாணவர்சங்கத்தினர் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. அவர்கள் வகுப்புகளுக்குப் போனாலும் கூடஒரு பயனும் இருக்காது என்கிறார்கள் பிற மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே, அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம்எதிரே இன்று போராட்டமும் நடைபெற்றது.
அதே நேரத்தில் மதுரை மற்றும் மேலூர் கல்லூரிகளுக்கு செப்டம்பர் 22 வரை விடுமுறையை அரசு நீட்டித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications