For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைசூர் அருகே தமிழக அரசு ஜீப்புக்கு தீ வைப்பு: கன்னட வெறியர்கள் வன்முறை

By Staff
Google Oneindia Tamil News

மைசூர்:

மைசூர் அருகே தமிழக வனத்துறைக்குச் சொந்தமான ஜீப்புக்கு கன்னட வெறியர்கள் தீ வைத்தனர்.

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கர்நாடக அரசியல் கட்சிகள் உதவியுடன் சிறை நிரப்பும் போராட்டத்தில் அம்மாநில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் விவசாயப் பிரிவினர் இன்று முதல் இந்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை மைசூரில் கூடிய நூற்றுக்கணக்கான விவசாயிகள் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு நோக்கி ஊர்வலமாகப்புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இது தவிர சாம்ராஜ்நகர், மண்டியா ஆகிய மாவட்டங்களிலும் இந்த சிறை நிரப்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாட்டு வண்டிகளை நடு ரோட்டில் மறித்து நிறுத்தியும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் மைசூர்- பெங்களூர்நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியையும் அவர்கள் எரித்துவருகின்றனர்.

மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டணத்தில் தமிழக அரசின் வனத்துறைக்குச் சொந்தமான ஜீப்பை ஒரு கும்பல் வழி மறித்தது. பின்னர்அந்த ஜீப்பில் இருந்த டீசல் டாங்கை உடைத்து டீசலை எடுத்து ஜீப் மீது தெளித்து அதற்குத் தீ வைத்தனர்.

ஜீப்பில் இருந்த தமிழக அரசு டிரைவரும் அதில் வந்தவர்களும் இறங்கி ஓடியதால் பலியாகாமல் உயிர் தப்பினர்.

இதற்கிடையே கர்நாடக விவசாயிகளின் பயிர்கள் கருகி விடாமல் பாதுகாக்கப்படும் என்று கர்நாடக அமைச்சரவைஉறுதியளித்துள்ளது. இன்று காலை அவசரமாகக் கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

11,000 ஹார்ஸ் பவர் எந்திரத்தின் மூலம் அணைகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு பாசனத்திற்கு விடப்படும் என்றும் அமைச்சரவைக்கூட்டத்தில் கூறிய கர்நாடக அரசு, எனவே விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

கிருஷ்ணா கொடும்பாவி எரிப்பு:

இதற்கிடையே சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முன் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் கொடும்பாவி இன்று எரிக்கப்பட்டது.

அதிமுகவின் புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது.

போலீஸார் ஓடி வந்து அவர்களைத் தடுத்து கொடும்பாவியை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X