கருணாநிதியை கடவுள் சும்மா விட மாட்டார்: பா.ஜ.க.
ஓசூர்:
கடவுளை நிந்தித்தால் திமுக தலைவர் கருணாநிதி தனிமைப்படுத்தப்படுவார் என்று மத்திய இளைஞர் நலத்துறைஇணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுதொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடவுளை நிந்திப்பவர்களை கடவுள் சும்மா விட மாட்டார். அவர்களை மக்கள் ஒதுக்கி விடுவார்கள்.
கருணாநிதி தொடர்ந்து கடவுள் குறித்து எதிர்வாதம் செய்துகொண்டிருந்தால் திமுக தொண்டர்களே சேர்ந்துகொண்டு அவரைத் தனிமைப்படுத்தி விடுவார்கள்.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக பிரதமர் நடந்து கொண்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதாபுகார் கூறுகிறார். ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள கட்சிகளிடையே ஒற்றுமையான போக்கு காணப்படாதது வருத்தம்தருவதாக உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒன்றுபட வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் விவசாயிகளுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திற்கும் பா.ஜ.க.வின் ஆதரவுஉண்டு.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் காவிரிப் பிரச்சினையில்ஒரே மாதிரியான கருத்தையே கொண்டுள்ளன என்றார் ராதாகிருஷ்ணன்.
-->












Click it and Unblock the Notifications