சி.பி.ஐ. விசாரணை கோருகிறது திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆத்தூர் வெடிவிபத்தில் சதி வேலை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் இந்த வழக்கு விசாரணையைசி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாருதி வேனில் வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். வெறும்வெங்காய வெடியால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் கூறப்படுகிறது.
இதனால் வெடி விபத்தில் சதி வேலை ஏதேனும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கைசி.பி.ஐயிடம் ஒப்படைக்கலாம் என்று திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கோரப்பட்டது.












Click it and Unblock the Notifications