For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் விரைவில் 3 உணவுப் பூங்காக்கள்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

தமிழகத்தில் விருதுநகர், நெய்வேலி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உணவுப் பூங்காக்கள் விரைவில்அமைக்கப்படவுள்ளதாக மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சரான என்.டி. சண்முகம்தெரிவித்துள்ளார்.

கடலூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முதலில் விருதுநகரில் இந்த உணவுப் பூங்கா அமைக்கப்படும். அதன் பிறகு நெய்வேலி மற்றும் வேலூரில் இரண்டுபூங்காக்கள் அமைக்கப்படும்.

சுமார் 25 முதல் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும். நாடு முழுவதிலும் 30இடங்களில் இது போன்ற உணவுப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு விதமான உணவுப் பொருள் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்த பூங்காவில் இடம் அளிக்கப்படும்என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X