கும்மிடிப்பூண்டியில் கள்ளச் சாராய ஆலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி:
சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் கள்ளச் சாராய தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடிமதிப்புள்ள கள்ளச் சாராயம் மற்றும் சாராயம் தயாரிக்க உதவும் அதி நிவீன கருவிகள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியிலிருந்து கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகமாநிலம் பெங்களூருக்குக் கடத்தப்படுவதாக மதுவிலக்குப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுமார் 40 போலீஸார் அடங்கிய குழுவினர் கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணா புரம் பகுதியில் திடீர்சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. வேறு பெயரில் இயங்கி வந்த அந்தத் தொழிற்சாலைக்குள்கள்ளச் சாராயம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தத் தொழிற்சாலையில் பல அதி நவீனக் கருவிகளும் இருந்தன. அங்கிருந்த இரண்டு பேரைக் கைது செய்தபோலீஸார், ரூ.1 கோடி மதிப்புள்ள கள்ளச் சாராயம் மற்றும் கருவிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.