உச்ச நீதிமன்றத்தை மீற கர்நாடகம் முடிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கபினி அணையில் கர்நாடக விவசாயி போதையில் விழுந்து இறந்ததால் கபினி அணை மூடப்பட்டதைத்தொடர்ந்து அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாகக் கூடி விவாதித்தது.

இதில் விவசாயி இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவுட முடிவு செய்யப்பட்டது. இறந்த விவசாயியின்குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்ய டெல்லியில் வரும் 21ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை காலவரையின்றி நிறுத்தி வைக்கவும், இதனால் என்ன விளைவுஏற்பட்டாலும் அதை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கர்நாடகம் சவால் விட்டுள்ளது.

கர்நாடகத்தின் இந்தச் சவால் உச்ச நீதிமன்றத்துக்கும் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர்ஆணையத்துக்கும் விடப்பட்ட சவாலாகும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம்:

தண்ணீர் தருவதை காலவரையின்றி நிறுத்தி வைக்க கர்நாடகம் முடிவு செய்துள்ளதால் தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடியும்பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை இன்று காலை முதல்வர் ஜெயலலிதாதலைமையில் அவசரமாகக் கூடியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+