"ரோமியோ"க்கள் குறித்து தகவல் சொல்ல புகார் பெட்டிகள்
சென்னை:
சென்னை நகரில் ஈவ் டீசிங் செய்பவர்கள் குறித்துத் தகவல் சொல்ல பல இடங்களில் புகார் பெட்டிகளைகாவல்துறை வைத்துள்ளது.
சென்னையின் வட பகுதியில் பெண்களைக் கேலி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகபோலீஸாருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதையடுத்து போலீஸார் திடீர் சோதனை நடத்தி பிடித்தனர். மொத்தம் 50 பேர் வரை பிடிபட்டனர்.அவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் வட சென்னை துணை கமிஷனர் மவுரியா, வட சென்னை பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரிகள் மற்றும்பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து ஈவ் டீசிங்கை சமாளிப்பதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது ரகசியமான முறையில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வசதி செய்து தரவேண்டும் என்று மவுரியாவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து வட சென்னையின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் புகார்பெட்டிகள் வைக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர் குறித்து பெண்கள் இந்தப் பெட்டிகளில் புகார் செய்யலாம்.
தினசரி பெட்டியைத் திறந்து பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் குறித்து போலீஸார் உரிய நடவடிக்கைஎடுப்பார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வசதியை வட சென்னை மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை வேண்டுகோள்விடுத்துள்ளது.
-->