தமிழக அதிரடிப்படை VS
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை உடனடியாக காட்டிலிருந்து வாபஸ்பெற வேண்டும் என்று தமிழக வனத்துறை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வனத்தைப் பாதுகாப்பது எங்கள் வேலை என்றும் அது கூறியுள்ளது. இது தொடர்பாக சங்க ஊழியர்கள் கூட்டம்சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில்,
அதிரடிப்படையை காட்டுக்கு அனுப்பியதன் மூலம் வனத்துறையின் உரிமையையும் அடிப்படை கடமையையும்அரசு பறித்து விட்டது.
காட்டுக்குள் கடத்தலைத் தடுக்க உடனடியாக 3,000 வனத்துறை கமாண்டோ வீரர்களை நியமிக்க வேண்டும்.இந்தப் படையினரால் வீரப்பனையும் பிடிக்க முடியும்.
காட்டுக் கிராமங்களில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களை இந்தப் பணிக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிரடிப்படையினரால் கிராமத்து மக்கள் மட்டும் அதிருப்தியடைந்துள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் மத்திய அரசு அனுப்பிய கமாண்டோ படையினரும் அதிருப்தியில் வெளியேறினர். இப்போதுவனத்துறையினரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications