ஜெர்மனி தேர்தல்: ஷ்ரேடர் மீண்டும் வெற்றி
பெர்லின்:
ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு அதிபரான ஜெரார்டு ஷ்ரேடரின் கட்சிக் கூட்டணி மயிரிழையில்வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஷ்ரேடர் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் கிரீன்ஸ் கட்சியும் இணைந்து இந்தத் தேர்தலில்போட்டியிட்டன.
இந்தக் கூட்டணிக்கு 47.1 சதவீத வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கூட்டணிக்கு 45.9சதவீத வாக்குகள் கிடைத்தன.
மொத்தமுள்ள 601 இடங்களில் 305 இடங்களை ஆளும் கூட்டணி கைப்பற்றியது. 294 இடங்களை கன்சர்வேடிவ்கூட்டணியும் மீதமுள்ள இரண்டு இடங்களை சீர்திருத்த கம்யூனிஸ்ட் கட்சியும் பெற்றன.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஜெர்மனி அதிபராக ஷ்ரேடர் நீடிப்பார்.
ஆனால் ஆளும் கூட்டணிக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த உள்ளூர் அரசியல் வெற்றிக்காக அமெரிக்கா உள்பட பல நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துள்ளதாகவும்கூறப்படுகிறது.
ஆனாலும் இவற்றையெல்லாம் எளிதாகச் சமாளித்து விடலாம் என்று ஷ்ரேடர் கூறினார். இருந்தாலும்மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த சில மாதங்களுக்குத் தான் ஆளும் கூட்டணி ஆட்சியில் நீடிக்கும்என்று கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரும் பவேரியாவின் கவர்னருமான எட்மண்ட் ஸ்டாய்பர் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications