ஸ்டேஷன் மாஸ்டரின் சமயோஜிதம்: உயிர் தப்பினாள் மனநிலை பாதித்த சிறுமி
சென்னை:
சென்னை கோட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மன நிலை பாதித்த சிறுமி, அந்தஸ்டேஷன் மாஸ்டரின் சமயோஜித நடவடிக்கையால் உயிர் பிழைத்தாள்.
கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மன நிலை பாதித்த ஒரு சிறுமி உலவிக் கொண்டிருந்தாள்.அப்போது பீச் நிலையத்திலிருந்து மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.
சிறுமி தண்டவாளத்தில் நிற்பதைப் பார்த்த பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள், அந்த சிறுமியைஅங்கிருந்து வருமாறு குரல் கொடுத்தனர். ஆனால் யாரும் இறங்கிச் சென்று அந்த சிறுமியை தண்டவாளத்தைவிட்டு இழுக்க முயற்சிக்கவில்லை.
ரயில் அந்த சிறுமியை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பிளாட்பாரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து அந்த சிறுமியை அப்படியே தூக்கி பிளாட்பாரத்தில்போட்டார். அவரும் குதித்து ஏறினார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஸ்டேஷன் மாஸ்டர் அந்த சிறுமியைக் காப்பாற்றியதை பிளாட்பாரத்தில்நின்றிருந்தவர்கள் பாராட்டினர்.
பின்னர் காயமடைந்திருந்த அந்தச் சிறுமியை அதே ரயிலில் ஏற்றி அடுத்த நிலையத்தில் இறங்கி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications