காதலிக்க மறுத்த பெண் கழுத்தை அறுத்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா நகர் அருகே திருமங்கலத்தில் காதலிக்க மறுத்த பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொன்றவாலிபர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சஜிதா பர்வீன். இவர் அண்ணா நகர் திருமங்கலத்தில் உள்ள ஒரு டிபார்ட்மென்ட்ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். அதே ஸ்டோரில் வேலை பார்த்து வந்தவர் பசலுதீன்.

இருவரும் சில காலத்திற்கு முன்பு காதலித்து வந்தனர். ஆனால் பசலுதீனின் நடவடிக்கை பிடிக்காத சஜிதா,அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் தன்னைக் காதலிக்குமாறு சஜிதாவை பசலுதீன் கடந்த சில நாட்களாக வற்புறுத்தி வந்தார். ஆனால் சஜிதாஅதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஸ்டோரை மூடும் நேரத்தில் சஜிதாவை தனி அறைக்குக் கூட்டிச் சென்ற பசலுதீன்அவரது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்றுள்ளார்.

பின்னர் தன்னையும் கத்தியால் அறுத்துக் கொண்டார்.

அவர்களை தேடிய பிற ஊழியர்கள், இருவரும் ரத்த வெள்ளத்தில் ஸ்டோர் ரூமில் இருப்பதைப் பார்த்துஅவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சஜிதா ஏற்கனவே இறந்து விட்டதாகமருத்துவர்கள் கூறினர்.

பசலுதீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+