சவூதியில் போலீஸ் கொடுமைக்கு தமிழக வாலிபர் சாவு
நாகர்கோவில்:
கன்னியாகுமரியைச் சேர்ந்த செல்வராஜ் என்ற வாலிபர், சவூதி அரேபியாவில் போலீஸாரால்கொடுமைப்படுத்தப்பட்டு இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பஞ்சி காட்டுவிளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் எட்டுவருடங்களுக்கு முன்பு சவூதி சென்றார். கொத்தனார் வேலைக்குச் சென்றசெல்வராஜ், அதிக அளவில் சம்பாதிக்கமுடியவில்லையே என்று வருந்தினார்.
இதையடுத்து குறுக்குப் புத்தியுடன் அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. தனது பெயரை நாசர் அலி என்று மாற்றிக்கொண்டு போலியான அடையாளத்துடன் வேறு நல்ல வேலையில் சேர்ந்தார்.
ஆனால் சில நாட்களிலேயே அவரது வேஷம் வெளுத்து விட்டது. இதையடுத்து சவூதி போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.
செல்வராஜை போலீஸார் மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து செல்வராஜின் நண்பர்களிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் செல்வராஜின்குடும்பத்தினருக்கு இதைத் தெரிவித்தனர். பதறிப்போன குடும்பத்தினர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் இத்தகவலைத் தெரிவித்தனர்.
அவர் சவூதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு செல்வராஜின் உடலை இந்தியாவுக்குஅனுப்ப ஏற்பாடு செய்யமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) செல்வராஜின் உடல் அவரது சொந்த ஊருக்கு வந்து சேரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
போலியான பெயருடன் பல வேலைகளுக்கு செல்வராஜ் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனாலேயேபோலீஸாரிடம் அவர் மாட்டிக் கொண்டதாக தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications