கபினி அணையில் குதித்து விவசாயி சாவு: தமிழகத்திற்கு நீர் திறப்பு நிறுத்திவைப்பு
பெங்களூர்:
கபினி அணையில் நேற்று ஒரு கர்நாடக விவசாயி குதித்து தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்துதமிழகத்திற்கு அவ்வணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடப்படுவதை எதிர்த்து மாண்டியா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து பெரும்போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கபினி அணையில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோம் என்றும்அவர்கள் மிரட்டியிருந்தனர்.
இந்நிலையில் சுமார் 600 விவசாயிகள் நேற்று கபிலா ஆற்றுப் பாலப் பகுதியில் சென்று போராட்டம் நடத்தினர்.தமிழகத்திற்கு நீர் திறந்து விடக் கூடாது என்று கோஷம் எழுப்பியவாறே அவர்கள் கபினி அணை வளாகத்தைநோக்கி முன்னேறினர்.
ஆனால் அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் "தள்ளுமுள்ளு" ஏற்பட்டது.
இந்நிலையில் ஒரு பெண் விவசாயி திடீரென்று கூட்டத்திலிருந்து வெளியேறி அணையில் குதிக்க முயன்றார்.ஆனால் போலீசார் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணைத் தடுத்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள்மீது தடியடியும் நடத்தினர் போலீசார்.
அப்போது திடீரென்று ஐந்து விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளையெல்லாம் உடைத்துக் கொண்டு கபினிஅணையின் பக்கம் சென்றனர். எங்கள் உயிரைக் கொடுத்தாவது தமிழகத்திற்கு தண்ணீர் செல்வதைத் தடுப்போம்என்று கோஷம் போட்ட அவர்கள் திடீரென்று அணையில் குதித்தனர்.
மெயின் மதகு வழியாக தண்ணீர் சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்த பகுதியில் அவர்கள் விழுந்ததால் வெள்ளத்தில்சிக்கிக் கொண்டு அந்த ஐந்து விவசாயிகளும் உயிருக்குப் போராடினர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாரும் சில விவசாயிகளும் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தசிலரும் கால்வாயில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த விவசாயிகளை மீட்டனர். ஆனால் அவர்களால் நான்குவிவசாயிகளை மட்டுமே மீட்க முடிந்தது.
குருசாமி (50) என்ற மற்றொரு விவசாயியை பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்களால் மீட்க முடியவில்லை.பின்னர் நேற்று நள்ளிரவு அணையிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் தள்ளி உள்ள அகத்தூர் கிராமத்தில்காவிரி ஆற்றின் ஓரத்தில் அவருடைய உடல் மீட்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கபினி அணைப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து கபினிஅணையின் மதகுப் பகுதி உடனடியாக மூடப்பட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் செல்வதும் தடுக்கப்பட்டது.
தற்போது சுமார் 2,000 கர்நாடக விவசாயிகள் கபினி அணையை முற்றுகையிட்டுள்ளனர். அங்கு மட்டுமல்லாமல்மைசூர், மாண்டியா மற்றும் பெங்களூரிலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து போலீசாரும் அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலை செய்தவர் போதையில் இருந்தாரா?
இதற்கிடையே கபினி அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட குருசாமி அப்போது போதையில்இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவருடன் குதித்த வேறு இருவரும் நன்றாகக் குடித்திருந்ததாகவும், போதை தலைக்கேறிய நிலையில் தான்அவர்கள் திடீரென்று அணையில் குதித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இறந்து போன குருசாமிக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். தன் மகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான்அவர் திருமணம் செய்து வைத்தார். குருசாமி பீச்சனஹள்ளி பஞ்சாயத்து உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசரமாக கூடிய கர்நாடக அமைச்சரவை:
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக அமைச்சரவை இன்று அவசரமாகக் கூடியுள்ளது.
கபினி அணையில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் இது குறித்து தீவிர விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
-->