வைரஸ் நோய் தாக்கிய பசுக்களைக் கொல்ல உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
ஆந்திர மாநில அரசால் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நோயால் பாதிக்கப்பட்டுள்ள பசுமாடுகளை கொல்லக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து 201 பசு மாடுகளை ஆந்திர அரசு கடந்த ஏப்ரல் மாதம் இறக்குமதி செய்தது. கப்பல்மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த மாடுகள் சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணையில் உள்ள ஒருகொட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
அப்போது அங்கு வைரஸ் நோய் பாதித்தன் காரணமாகப் பல மாடுகள் இறந்து விட்டன. மற்ற மாடுகளுக்கும் இந்தவைரஸ் நோய் பரவியது. இதையடுத்து மற்ற மாடுகளையும் கொன்று விட பள்ளிக்கரணை கொட்ட நிர்வாகிகள்முடிவு செய்தனர்.
இந்தத் தகவலை அறிந்த தேசிய மாடுகள் கமிஷன் மற்றும் பாரதிய பிராணிகள் நலச் சங்கம் ஆகியவை இணைந்துசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதிகோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் தன்னுடைய தீர்ப்பில்,
மாடுகளை அடைத்து வைத்த இடத்தில் முறையான சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் தான் மாடுகளுக்குவைரஸ் நோய் ஏற்பட்டுள்ளது.
எனவே அவற்றைக் கொல்லக் கூடாது. அனைத்து மாடுகளுக்கும் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டது.
-->