For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள் மீது தடை நீடிக்க வேண்டும்: ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். எனவே அவர்கள் எடுக்கும் எந்தநிலையையும் நான் ஆதரிக்க மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தனி நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டதாக புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறித்து ஜெயலலிதாவிடம்நிருபர்கள் கேட்டபோது,

இது முற்றிலும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. இதில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை.

புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்ட இயக்கம். எனவே புலிகளின் எந்த நடவடிக்கையையும் நான்வரவேற்க மாட்டேன்.

இலங்கையில் அமைதித் தீர்வு ஏற்பட்டாலும் கூட புலிகள் இயக்கம் மீது தடை நீடிக்க வேண்டும். பிரபாகரனை நாடுகடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார் ஜெயலலிதா.

புலிகள் குறித்து நிருபர்கள் மேலும் கேட்டபோது சட்டென்று இடைமறித்த ஜெயலலிதா, இப்போது எனதுகவனமெல்லாம் காவிரிப் பிரச்சினை குறித்து தான் இருக்கிறது என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X