மாலத்தீவு சென்றார் வாஜ்பாய்
மாலே:
பிரதமர் வாஜ்பாய் நான்கு நாள் பயணமாக இன்று மாலத்தீவுகள் வந்து சேர்ந்தார்.
அவரை மாலத்தீவுகள் அதிபரான அப்துல் கயூம் அன்புடன் வரவேற்றார்.
அண்டை நாடுகளுடன் இந்திய உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தான் மாலத்தீவு பயணத்தைமேற்கொண்டுள்ளதாக வாஜ்பாய் கூறினார்.
மாலத்தீவுகளுடனான பல பொருளாதார உறவுகள் குறித்தும் இப்பயணத்தின் போது அந்நாட்டு அரசுடன்வாஜ்பாய் விவாதிக்கவுள்ளார்.
நாளை கயூமுடன் வாஜ்பாய் விரிவான பேச்சு நடத்தவுள்ளார். சர்வதேசத் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறுவிவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதிக்கவுள்ளனர்.
முன்னதாக, மாலே கிளம்புவதற்கு முன் டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய்,பாகிஸ்தானின் சிந்தனையிலும் செயலலிலும் மாற்றமே ஏற்படவில்லை என்றும் எல்லை தாண்டியபயங்கரவாதத்தைத் தொடர்ந்து அந்நாடு தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
நாளைய பேச்சுவார்த்தையின் போது கயூமிடமும் வாஜ்பாய் இதுகுறித்துப் பேசவுள்ளார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போது தான் முதல் முறையாக மாலத்தீவுகளுக்குப் பயணம்செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவுகளில் சுமார் 15,000 இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications