கர்நாடகம் விரையும் காவிரி கண்காணிப்புக் குழு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் மறுத்து விட்டதைத் தொடர்ந்துஅம்மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக காவிரி கண்காணிப்புக் குழுவினர்இன்று அங்கு செல்கின்றனர்.

டெல்லியில் நேற்று அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழகத்திற்குஇப்போதைக்கு நீர் திறந்து விட முடியாது என்று கூறிவிட்டார். மேலும் நேற்று இரவு பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துஇதற்கான காரணங்களை விளக்கி மனு ஒன்றையும் கிருஷ்ணா அளித்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவருமான வாஜ்பாய் காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து காவிரி கண்காணிப்புக் குழுவினர் இன்று கர்நாடகம் விரைந்து அங்குள்ள அணைகளின் நீர் இருப்புகுறித்து நாளை ஆய்வு நடத்துகின்றனர்.

இந்தக் குழுவினர் தமிழகத்திற்கும் சென்று மேட்டூர் மற்றும் கல்லணை ஆகிய அணைகளின் நீர் இருப்பு குறித்துஆய்வு நடத்துவார்கள் என்று தெரிகிறது.

பின்னர் இந்தக் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் அடுத்தகட்ட நடவடிக்கையைமேற்கொள்வார்.

இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்றஅவமதிப்பு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+