வறட்சி மாவட்டங்களைப் பார்வையிட நிபுணர் குழு தமிழகம் வருகை
சென்னை:
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களிலும் நேரடி ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழுஇன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சென்னை வருகிறது.
தமிழகத்தில் 19 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு நிவாரணப் பணிகளைமேற்கொள்வதற்காக ரூ.720 கோடி நிதி தர வேண்டும் என்றும் உடனடியாக 2 லட்சம் டன் உணவு தானியங்கள் தரவேண்டும் என்றும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து உடனடியாக 50,000 டன் உணவு தானியங்களைத் தர பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து வறட்சி பாதித்த பகுதிகளில் நேரடி ஆய்வு செய்வதற்காக மத்திய வேளாண்மைத்துறை இணைச்செயலர் ஜோகிந்தர் சிங் தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர் குழு தமிழகதின் 19 மாவட்டங்களிலும் நேரடிஆய்வு செய்ய இன்று மாலை சென்னை வருகிறது.
சென்னை வரும் இக்குழுவினர் 4 குழுக்களாகப் பிரிந்து 19 மாவட்டங்களுக்கும் சென்று வறட்சி நிலையைஆராய்கிறார்கள். அதன் பின்னர் மீண்டும் சென்னை வந்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்துகிறார்கள்.
பின்னர் டெல்லி திரும்பி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்திற்குவறட்சி நிவாரண நதி ஒதுக்கப்படும்.
-->












Click it and Unblock the Notifications