போலி பட்டா மூலம் ரூ.27 லட்சம் மோசடி செய்த பலே பெண் பட்டதாரி
சென்னை:
சென்னையில் ரூ.27 லட்சம் அளவுக்கு மோசடி செய்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தகீதா என்ற ஹேமாவை போலீஸார் கைது செய்தனர்.
சேலத்தைச் சேர்ந்தவர் கீதா என்ற ஹேமா. பட்டதாரியான இவர் கடந்த 1997ம் ஆண்டு சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபரான வைத்தியலிங்கம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை, தனது நிலம் போலபோலியான பட்டா சான்றிதழைத் தயாரித்தார்.
பின்னர் சென்னையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேரிடம் அந்த சான்றிதழை தனித்தனியாகக் காட்டிரூ.27 லட்சம் வரை முன்பணமாகக் கறந்துள்ளார். அதன் பிறகு கீதா "எஸ்கேப்" ஆகிவிட்டார்.
ஏமாந்து போன மூன்று பேரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீதாவை தனிப்படைப் போலீஸார் தேடிவந்தனர். பல ஆண்டுகளாகச் சிக்காமல் இருந்து வந்த கீதா சென்னை போலீஸாரிடம் சமீபத்தில் சிக்கினார்.
இதைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கீதா பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
-->












Click it and Unblock the Notifications