"ஜெ. முதல்வராக இருக்கும் வரை காவிரி பிரச்சினை தீராது"
சென்னை:
ஜெயலலிதா தமிழக முதல்வராக இருக்கும் வரை காவிரிப் பிரச்சினை தீரவே தீராது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளரான அனில் சாஸ்திரி கூறினார்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராக இருந்த ஜி.ஏ. வடிவேலு, இக்கட்சியின்தமிழகப் பிரிவைக் கலைத்து விட்டு சுமார் 1,000 ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.
சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த நகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அனில் சாஸ்திரி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினை போன்ற நெருக்கடியான, சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேகத்தை விடவிவேகம், சாதுரியம், ராஜதந்திரம் அவசியம். அவை யாவும் ஜெயலலிதாவிடம் இல்லை.
என்னைப் பொருத்தவரை, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருக்கும் வரை காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே முடியாது. இது எனது தனிப்பட்ட கருத்து என்றார் அனில் சாஸ்திரி.
காங்கிரசை தாக்கும் சமூக நீதிக் கட்சி:
இதற்கிடையே காவிரிப் பிரச்சினைக்காக தீவிரமாக பாடுபட்டு வரும் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியின் அனில்சாஸ்திரி விமர்சித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன்கூறினார்.
இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவிரிப் பிரச்சினையில் மக்கள் நலன் குறித்து அக்கறையே காட்டாதகருணாநிதியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து ஜெயலலிதா ஆட்சியை அசைக்கப் பார்க்கிறார்கள். அது நடக்காதுஎன்றும் ஜெகவீரபாண்டியன் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications