ஊழியர்களுக்கு சம்பள பாக்கி: தாசப்பிரகாஷ் ஹோட்டல் அதிபர் கைது
சென்னை:
ஊழியர்களுக்கு சம்பளப் பாக்கி வைத்தது தொடர்பாக பிரபல தாசப்பிரகாஷ் ஹோட்டலின் அதிபரானபாலகிருஷ்ண ராவ் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள தாசப்பிரகாஷ் ஹோட்டலின் கிளைகள் டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில்உள்ளது.
சமீபத்தில் டெல்ல கிளை மூடப்பட்டது. ஆனால் கிளையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் சேமநல நிதி (பி.எப்.) ஆகியவை வழங்கப்படவில்லை என்று புகார் கூறப்பட்டது.
இதையடுத்து பாலகிருஷ்ண ராவை கைது செய்ய டெல்லியில் உள்ள ஒரு கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து டெல்லி போலீஸ் குழு சென்னை வந்தது. அங்கு பாலகிருஷ்ண ராவை டெல்லி போலீசார்கைது செய்தனர்.
அப்போது தனக்கு இதய நோய் இருப்பதாக கூறிய பாலகிருஷ்ண ராவ், அப்பல்லோ மருத்துவமனையில் தன்னைஅனுமதிக்குமாறு கூறினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக எழும்பூர் கோர்ட்டில் டெல்லி போலீஸார் மனுத் தாக்கல்செய்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications