பொடா சட்டத்தை எதிர்த்து சுப.வீரபாண்டியன் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தின் சில பகுதிகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார் வீரபாண்டியன்.உயர்நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்துள்ள வழக்கில்,

இலங்கைத் தமிழர்களின் அவலங்களை எடுத்துரைக்கும் இயக்கமாக தமிழர் தேசிய இயக்கம் உள்ளது.

இப்பிரச்சினையில் இலங்கை அரசுக்கும் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளுமான விடுதலைப்புலிகளுக்கும்இடையே சுமூக தீர்வு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால் எங்களை பொடா சட்டத்தைப் பயன்படுத்தி தவறான முறையில் கைது செய்துள்ளார்கள்.

மத்திய அரசு முன்பு தடா சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் அந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைஅறிந்ததும், சாதாரண சட்டங்களே போதுமானது என்று கூறி தடா சட்டத்தை வாபஸ் பெற்றது.

ஆனால் அதை விட மோசமான சட்டமாக பொடா சட்டம் உள்ளது. பொடா சட்டத்தின் 1(4), 3 முதல் 9, 14,18 முதல்24, 26, 27, 29 முதல் 33, 36 முதல் 53 ஆகிய சட்டப் பிரிவுகளை செல்லாததாகவும் சட்டவிரோதமானது என்றும்அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி தினகர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+