தமிழகத்துக்கு எதிராக ராஜ்குமார் தலைமையில் நாளை பெங்களூரில் ஊர்வலம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழகத்துக்கு எதிராக நாளை நடிகர் ராஜ்குமார் தலைமையில் காவிரி ஊர்வலம் நடக்கவுள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நீரைத் தரக் கூடாது என்று வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடக்கிறது. ஏற்கனவே, மைசூரிலும்மாண்டியாவிலும் நடந்து வரும் தமிழ்நாட்டுக்கு எதிரான கலாட்டாக்களுக்கு ராஜ்குமார் ரசிகர்கள் தான் முக்கியக் காரணம்.

இந் நிலையில் ராஜ்குமாரின் நேரடித் தலைமையில் தமிழகத்துக்கு எதிரான இந்த கண்டன ஊர்வலம் நடக்கிறது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நடக்க உள்ள இந்தப் பேரணி தமிழர்கள் நிறைந்த காந்தி நகரில் (மெஜஸ்டிக் பஸ்ஸ்டாண்ட் பகுதி) ஆரம்பிக்கிறது. காந்தி நகர் பூங்காவில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த ஊர்வலத்துக்கு ராஜ்குமார்தலைமை வகிக்கிறார்.

Rajkumar familyமுக்கிய சாலைகள் வழியாக இந்த ஊர்வலம் குயீன்ஸ் ரோடு அருகே உள்ள ராஜ்பவனை அடையும். அங்கு கவர்னரைச் சந்தித்துஇவர்கள் தமிழகத்துக்குத் தண்ணீர் விடக் கூடாது என்ற கோரிக்கை மனுவையும் தர உள்ளனர்.

பின்னர் முதல்வர் கிருஷ்ணாவையும் சந்தித்து மனு தர உள்ளனர்.

காவிரிப் பிரச்சனையில் கர்நாடகத்துக்கு ஆதரவான தீர்ப்பு வரும் வரை அனைத்து பொது நிகழ்ச்சிகயுைம் புறக்கணிக்கப்போவதாக கர்நாடக திரைப்படத்துறையின் பல்வேறு அமைப்புகள், சஙகங்கள் அறிவித்துள்ளன.

நாளை நடத்தப்பட உள்ள தமிழக எதிர்ப்பு ஊர்வலம் குறித்து நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் பெங்ளூரில் நடந்தது. இதில்ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, அவரது மகன் ராகவேந்திர ராஜ்குமார், ராஜ்குமார் ரசிகர் மன்றச் செயலாளர் சா.ரா.கோவிந்துஆகியோர் கலந்து கொண்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+