மாணவிகளுக்கு கல்லூரியிலேயே மலிவு விலை சல்வார்: அரசு திட்டம்
சென்னை:
தமிழக அரசின் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு குறைவான விலையில் சல்வார் கமீஸ் மற்றும் சேலைஆகியவற்றை கல்லூரி வளாகங்களிலேயே வைத்து விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.
தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நெசவாளர்கள் மிகுந்தநெருக்கடிக்குள்ளானார்கள். கஞ்சித் தொட்டியும், போட்டியாக முட்டை பிரியாணியும் வழங்கும் அளவுக்குஅவர்களது நிலை சென்றது.
இதையடுத்து நெசவாளர் துயர் துடைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது.முதல்கட்டமாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேங்கிக் கிடக்கும் வேட்டி, சேலைகளை வாங்கி ரேஷன்கடைகள் மூலமாக மலிவு விலையில் அரசு விற்று வருகிறது.
மேலும் புதுப் புது டிசைன்களில் சேலைகளை உற்பத்தி செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்நெசவாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் மற்றொரு திட்டமாக, கல்லூரி மாணவிகளுக்கு குறைந்த விலையில் சல்வார் கமீஸ் மற்றும்சேலைகளை விற்க தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.
இவற்றை வாங்க கடை கடையாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. மகளிர் கல்லூரி வளாகங்களிலேயேஸ்டால் போட்டு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications