நாடு முழுவதும் அதிகபட்ச பாதுகாப்பு
அகமதாபாத்:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய மதக் கலவர பயம் இன்னும் மறையாத குஜராத்தில் இந்த கோவில்தாக்குதல் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மீண்டும் இந்து- முஸ்லீம் இடையே கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் குஜராத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான மதக் கலவரத்தைச் சந்தித்த அகமதாபாத்தில் ஒரு பட்டாலியன் பிரிவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின்முக்கிய நகர்களிலும் முஸ்லீம்கள் வசித்து வரும் முகாம்களிலும் தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
குஜராத்தில் அமைதியை நிலை நாட்ட 17 மத்திய, மாநில உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தொடர்ந்து மாநில நிலையைக் கண்காணித்து தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் பாதுகாப்பு:
இச் சம்பவத்தால் குஜராத் தவிர மற்ற மாநிலங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கர்நாடகம், ஜார்க்கண்ட், பிகார், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திராவில் காவல்துறையினர் உஷார்நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதுமே பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இதற்காக உள்துறையில் சிறப்புசெல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது பாதுகாப்பு நிலை குறித்து துணைப் பிரதமர் அத்வானிக்கு அறிக்கை தரப்பட்டுவருகிறது.
டெல்லியிலும் இதே போல அதிக பட்ச பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை கோவிலில் போலீஸ்குவிக்கப்பட்டு பக்தர்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
அமைதி நிலவுமா?
இதற்கிடையே மக்களை அமைதியாக இருக்குமாறு பல இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் கோரிக்கைவிடுத்துள்ளன. இதுவரை குஜராத்திலோ அல்லது நாட்டின் வேறு பகுதிகளிலோ எந்தவிதமான அசம்பாவித சம்பவமும்நடைபெறவில்லை.
-->












Click it and Unblock the Notifications