காவிரி: நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்படுத்திய வக்கீல்கள்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற வழக்கறிஞர்கள் தடுக்கப்பட்டார்கள்.
வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் கருப்பன் தலைமையில் வக்கீல்கள் குழு ஒன்று இன்று காலை கர்நாடகத்தைக்கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்றது.
உடனடியாக விரைந்து வந்த நீதிமன்றப் பதிவாளர் சிவராமன், உயர்நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்றபோராட்டங்கள் வரம்பு மீறியவை. எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.
ஆனால் தொடர்ந்து கருப்பன் தலைமையிலான வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டே தீருவோம் என்றனர்.தொடர்ந்து சிவராமன் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தவே போராட்டத்தைக் கைவிட்டனர் வக்கீல்கள்.
பின்னர் கருப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி நீர் ஆணையத் தீர்ப்பை கர்நாடகம் மதிக்கவில்லை.சரி, அது பரவாயில்லை என்றாலும் கூட சுப்ரீம் கோர்ட்டையே தூக்கி தூரப் போட்டு விட்டார்கள்.
எனவே இனிமேலும் பொறுக்க முடியாது என்பதால் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
காவிரிப் பிரச்சினையில் ஒன்றுமே செய்யாமல் மாநிலத்திற்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தைச்சேர்ந்த 10 மத்திய அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் கருப்பன்.
கர்நாடகத்தைக் கண்டித்து 30ம் தேதி பந்த்:
இதற்கிடையே கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 30ம் தேதி பந்த் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவுசெய்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. அக்கூட்டத்தில் காவிரி நீரைத் திறந்து விடாமல்அழிச்சாட்டியம் செய்யும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் சிவசாமிபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரி நீரைத் திறந்து விடாமல் அடம் பிடிக்கும் கர்நாடக அரசுக்கு கூட்டத்தில் கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 30ம் தேதி முழு அடைப்பு நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
விவசாயிகளின் கடன் நிலுவையை அரசு ரத்து செய்து விட்டு, மீண்டும் புதுக் கடன்கள் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
தமிழகத்தையே வறட்சி பாதித்த மாநலமாக அறிவிக்க வேண்டும் என்றார் சிவசாமி.
-->












Click it and Unblock the Notifications