ரேஷன் அரிசி விலை கிடுகிடு உயர்வு: ஜெ. திடீர் நடவடிக்கை
சென்னை:
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக ரேஷன் அரிசி விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 10 கிலோவுக்குமேல் ரேஷன் அரிசியை வாங்குபவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளனர்.
இப்போது ரேசன் கடையில் 1.20 கோடி பேர் அரிசி வாங்கி வருகின்றனர். ரேசன் கடைகளில் இப்போது ஒருகிலோ அரிசியின் விலை ரூ. 3.50 ஆக உள்ளது.
இந் நிலையில் 10 கிலோ வரை மட்டுமே ரூ. 3.50க்கு விற்கப்படும் எனவும் 10 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கினல்அதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 6 ஆக இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழகத்தின் நிதி நிலைமை படு மோசமாக உள்ளது. அரசே திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளது. கடந்த காலத்தில்திமுக ஆட்சியினர் செய்த நிர்வாக சீர்கேடுகளே இதற்குக் காரணம்.
நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு உதவவில்லை. உலக வங்கியும், பிற வங்கிகளும் கூட உதவமுன்வரவில்லை. இந்த நிலையில் நிதி நிலையை சீரமைக்க சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி ரேஷன் கடைகளில் 10 கிலோவுக்கு மேல் விற்கப்படும் அரிசியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.6 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 10 கிலோவுக்குள் அரிசி வாங்குபவர்கள் ஏற்கனவே அமலில் உள்ள ரூ.3.50 (ஒருகிலோவுக்கு) கொடுத்தாலே போதும்.
வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
மேலும் இனிமேல் நேரடி நெல் கொள்முதல் செய்வதற்குப் பதில், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல்கொள்முதல் கொள்கையைக் கடைப்பிடிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய தொகுப்பிலிருந்து 2 லட்சம் டன் அரிசியை ரூ.12க்கு வாங்கி, அது தமிழக மக்களுக்கு கிலோ ரூ.3.50க்குக்காடுக்கப்படுகிறது. மானியத் தொகையாக மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 1,600 கோடிக்கு நிதிச்சுமைஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரிசி விலை உயர்வின் மூலம் இந்த நிதிச்சுமை ரூ.774 கோடியாகக் குறையும். எனவேபொதுமக்கள் அரசின் நிலையை உணர்ந்து இந்த விலை மாறுதலை ஏற்றுக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications