மலேசியா: சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
திருச்சி:
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இந்த ஆண்டு இதுவரை 1.8 லட்சம் இந்தியர்கள் சுற்றுலாப் பயணம்மேற்கொண்டுள்ளனர் என மலேசிய சுற்றுலாத்துறை மேம்பாட்டு வாரியத்தின் இயக்குனரான மனோகரன்கூறினார்.
இது தொடர்பாக திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து மலேசியா வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக மலேசிய சுற்றுலாத்துறை பலபுதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதை முன்னிட்டு மலேசியன் ஏர்லைன்ஸ் தன்னுடைய விமானங்களில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையைஅதிகரிக்க உள்ளது. மேலும் இந்தியா-மலேசியா இடையிலான விமானங்களின் எண்ணிக்கையையும்அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவிலிருந்து மலேசியா வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளன.
மலேசியச் சுற்றுலாத்துறை வரும் நவம்பர் மாதம் சென்னையில் "மலேசிய உணவுத் திருவிழா" நடத்தவுள்ளது.
மலேசியாவுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெருமளவுஅதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் 1.43 லட்சம் இந்தியர்கள் மலேசியாவுக்கு வந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு செப்டம்பரிலேயே இந்த எண்ணிக்கை 1.8 லட்சத்தைத் தொட்டுவிட்டது.
மலேசியா வரும் இந்தியர்களில் 55 சதவீதப் பேர் சுற்றுலாப் பயணிகள் தான். இங்கு வரும் ஒவ்வொரு இந்தியசுற்றுலாப் பயணியும் சுமார் 1,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்கின்றனர்.
வியாபாரம் தொடர்பாக சுமார் 35 சதவீதம் இந்தியர்கள் மலேசியாவுக்கு வருகின்றனர்.
மேலும் கடந்த ஆண்டு மலேசியாவுக்கு வந்த 1.26 கோடி சுற்றுலாப் பயணிகளில் 8.6 சதவீதம் பேர்இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான். இந்த ஆண்டில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால்மலேசியாவுக்கு 630 கோடி அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்துள்ளது என்றார் மனோகரன்.
-->












Click it and Unblock the Notifications