நெல்லை அருகே ஓடும் பஸ்சில் 2 பேர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே ஓடும் பஸ்சில் 2 பேர் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.
செங்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், இளையபெருமாள் மற்றும் வேலுச்சாமி ஆகிய மூன்று பேரும் ஒருவழக்கு தொடர்பாக திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டியிருந்தது.
இதையடுத்து செங்கோட்டையிலிருந்து ஒரு பஸ்சின் மூலம் அவர்கள் திருநெல்வேலிக்குக் கிளம்பினர்.
திருநெல்வேலி அருகே அந்த பஸ் வந்து கொண்டிருந்த போது, அதை வழிமறித்த ஒரு கும்பல் பஸ்சுக்குள் ஏறியது.
பின்னர் பஸ் சென்று கொண்டிருக்கும் போது அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்ற பயணிகளின்கண்ணெதிரிலேயே அந்த மூன்று பேரையும் அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர்.
இதில் ராமகிருஷ்ணனும் இளையபெருமாளும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பயங்கரவெட்டுக் காயமடைந்த வேலுச்சாமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications