சாலைகளில் படுத்து சாலைப் பணியாளர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன்சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார்கள்.
சுமார் 10,000 சாலைப் பணியாளர்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த சில நாட்களாக அவர்கள் பல்வேறுபோராட்டங்களில ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக அவர்கள் குடும்பத்துடன் சாலைகளில் படுத்து போராட்டம் நடத்தினர்.
ஈரோட்டில் சுமார் 1,000 சாலைப் பணியாளர்கள்குடும்பத்துடன் சாலைகளில் படுத்துப் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல மதுரையிலும் 500க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் சாலைகளில் படுத்து போராட்டம்நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications