தமிழகத்தில் பந்துக்கு ஆதரவில்லை
சென்னை:
விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்த பந்துக்கு தமிழகத்தில் எந்த ஆதரவும் இல்லை.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்குகின்றன. கடைகள் அனைத்தும் திறந்துள்ளன. அரசு மற்றும் தனியார்அலுவலகங்கள் இயங்குகின்றன. வங்கிகளும் மூடப்படவில்லை.
இந்த பந்தையொட்டி பா.ஜ.கவுக்கு செல்வாக்குள்ள கோவை, நாகர்கோவில் மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது. மற்றபடி தமிழகத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை.
திருப்பூரில் மட்டுமே இந்த பந்தினால் நிலையை பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பனியன் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.இங்கு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மற்றபடி பிற கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர் அருகே பல்லடம், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. இதில் 2 பெண் பயணிகள்காயமடைந்தனர். பஸ்களும் உடைக்கப்பட்டன.
பொள்ளாச்சியில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 50 பேர்கைது செய்யப்பட்டனர். இங்கு கடைகளை அடைக்கச் சொல்லி பாட்டில்களை வீசி கலாட்டா செய்த 25 பேரை போலீசார் தடியடிநடத்திக் கலைத்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர்.
மதுரையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஒரு பெண் உள்பட 69 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். அதே போலபெரியார் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பஸ் மீது சிலர் கற்களை வீசிவிட்டு ஓடினர். ஆனால், இதில் பஸ்சுக்கு சேதம்ஏற்படவில்லை.
இந்த திருபபூர் சம்பவங்கள் தவிர பந்தினால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிப்பும் இல்லை. மாநிலத்தில்வேறு எங்குமே இந்த பந்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மிகுந்த அமைதி நிலவுகிறது.
-->












Click it and Unblock the Notifications