மதுரை-சென்னை இடையே விரைவில் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்
மதுரை:
மதுரைக்கும் சென்னைக்கும் இடையே ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் விடப்படும் என்று ரயில்வேத்துறைஇணை அமைச்சரான ஏ.கே. மூர்த்தி கூறினார்.
மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தற்போது இந்திய ரயில்வேயிடம் இல்லை.
தமிழகத்தில் உள்ள ஆளற்ற ரயில்வே கிராசிங் அனைத்திலும் ஊழியர்களை நியமிப்பதற்கான பணிகள் விரைவில்மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக தமிழக எம்.பிக்களுடன் ரயில்வேத்துறை அமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு நடத்தவுள்ளார்.
கன்னியாகுமரி-சென்னை நகரங்களுக்கு இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்குவதற்கு ரூ.2,000 கோடிஉதவியை அரசிடம் கோரவுள்ளேன்.
மேலும் தமிழகத்தில் 59 ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.இதில் 12 மேம்பாலப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் பழுதான பாலங்கள் எதுவும் இருக்கிறதா என்று சமீபத்தில் நாங்கள் சர்வே எடுத்தோம். ஆனால்அப்படிப்பட்ட பழுதான பாலங்கள் எதுவும் நம் மாநிலத்தில் இல்லை.
மதுரைக்கும் சென்னைக்கும் இடையே ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கானஅனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும்.
விருதுநகர்-ராஜபாளையம் இடையிலான அகல ரயில் பாதைத் திட்டம் 2003ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்என்றார் மூர்த்தி.
-->












Click it and Unblock the Notifications