அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஒரு அதிமுக பிரமுகர் வீட்டில் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள், கத்திகள் போன்றவைபறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கேணி. இவர் அதிமுகபிரமுகர் ஆவார்.
கொலை வழக்கில் தற்போது தலைமறைவாக உள்ள செங்கேணியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் செங்கேணியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஏராளமான நாட்டுவெடிகுண்டுகள், பல்வேறு வடிவங்களிலான கத்திகள் ஆகியவை கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக புதிய வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே மதுரை பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரைசோதித்ததில், அவர்களிடம் 627 வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்ட போலீசார் அவற்றைக் கைப்பற்றிஅவர்களையும் கைது செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications