சென்னையில் ஊர்வலம் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கானமாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பேச வந்த ஆசிரியர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந் நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன்கள், கார்கள், லாரிகளில் சென்னை வந்தனர்.

தென் மாவட்டங்களில் இருந்து நேற்றே புறப்பட்டுவிட்ட இந்த மாணவர்களின் வாகனங்களை போலீசார் பல்வேறு இடங்களில்நள்ளிரவிலேயே தடுத்து நிறுத்தி அவர்களைக் கைது செய்தனர்.

இதையும் மீறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் சென்னை வந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை மன்றோ சிலையில்இருந்து கோட்டை நோக்கி இன்று காலை ஊர்வலம் புறப்பட்டனர்.

ஆனால், இந்தப் பேரணிக்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறி அவர்களை போலீசார் தடுத்தனர். இயைடுத்து மாணவ,மாணவிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவிகள் கொண்டு வந்திருந்த போர்டுகள், முழகக்கங்கள் அடங்கிய துணி பேனர்களை பெண் போலீசார் பறித்தபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையும் மீறி மாணவர்கள் ஊர்வலம் செல்ல முயன்றபோது அவர்களை ஆயிரக்கணக்கான போலீசார் சுற்றி வளைத்தனர். அந்தமாணவ, மாணவிகளைக் கைது செய்தனர்.

பின்னர் போலீஸ் வேன்களில் இந்த மாணவ, மாணவிகளை தள்ளிய போலீசார் அவர்களை காவல் நிலையங்களுக்குக் கொண்டுசென்றனர்.

மாணவர்களுக்கு ஆதரவாக பேச வந்த ஆசிரியர்களை போலீசார் ஓட ஓட விரட்டியடித்தனர்.

இந்தச் சம்பவத்தால் மாநிலம் முழுவதும் அனைத்து அரசுக் கல்லூரிகளையும் இன்று ஒரு நாள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+