இமாம் அலியை கல்லால் அடித்துக் கொன்ற போலீசார்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
போலீசாரிடமிருந்த இமாம் அலி இன்று தப்பி ஓட முயற்சித்த போது அவனைக் கல்லால் அடித்தே போலீசார்கொன்றனர்.
இன்று அதிகாலை பெங்களூர் சஞ்சய் நகரில் இமாம் அலி உள்ளிட்ட தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்த போலீசார் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருந்த போது,அங்கிருந்து இமாம் அலி நைசாக நழுவ முயற்சித்தான்.
அப்போது அதைக் கண்ட சில போலீசார் அவனைச் சுற்றி வளைத்துத் தாக்கி, கற்களால் அடித்தே கொன்றுவிட்டனர்.
கடைசியில் அவன் தலையில் ஒரு கல்லைப் போட்டுக் கொன்றதாக அவனைக் கொன்ற ஒரு போலீஸ்காரர்தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications