கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மீண்டும் பந்த்: கல்வீச்சு, கலவரம்
கன்னியாகுமரி:
குஜராத்தில் கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பந்த் நடத்தப்பட்டுவருகிறது.
நேற்றே நாடு முழுவதும் வி.எச்.பி. அழைப்பு விடுத்த பந்த் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், இந் நிலையில் கன்னியாகுமரியில்மீண்டும் இன்று பந்த் நடத்த பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாகர்கோவில் பகுதியில்பா.ஜ.கவுக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதால் இந்த தனி பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பந்த்தையொட்டி பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதில் 20 அரசு, தனியார் பஸ்கள் சேதமடைந்தன.மூடப்பட்டிருந்த கடைகள் மீதும் கல்வீசியும், பல தெருக்களில் சிலர் கும்பல் கும்பலாகச் சென்று சோடா பாட்டில்களை வீசிகலவரம் செய்தனர்.
இச் சம்பவங்களால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடைகள்மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அலுவலகங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இந்த திடீர் பந்ந்தினால் கன்னியாகுமரிக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பெரும் அவஸ்தைக்குள்ளாயினர். இரணியல்உள்ளிட்ட சில ஊர்களில் தீவிரவாதிகளின் உருவ பொம்மைகளை பாரதீ ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொளுத்தினர்.












Click it and Unblock the Notifications