மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மோதல்: பெரும் அமளி
மதுரை:
மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாக மாநகராட்சிவளர்ச்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் கூறியதால் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி மன்றக் கூட்டம் இன்று மேயர் செ. ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
அப்போது ஆளும் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பேசுகையில், மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்குதமிழக அரசு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது. இதனால் திமுகவுக்குக் கெட்ட பெயர் ஏற்பட வேண்டும் என்றநோக்கில் அதிமுக அரசு செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் திடீரென்று வெளிநடப்பும் செய்தனர்.
இதற்கிடையே திமுகவினரின் இந்தப் புகாருக்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேயர்ராமச்சந்திரன் இருக்கைக்கு சென்று அவரை முற்றுகையிட்டு திமுகவினரின் பேச்சுக்களை அவைக் குறிப்பிலிருந்துநீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் மீண்டும் உள்ளே வந்து அதிமுகவினருக்கு எதிராகக்கோஷமிட்டனர்.
இதனால் சபையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இரு கட்சி கவுன்சிலர்களும் மோதிக் கொள்ளும் நிலைஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மேயர் ராமச்சந்திரன் கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
-->












Click it and Unblock the Notifications